spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெறும் முதல் தெலுங்கு நடிகர்....நெகிழ்ச்சியில் அல்லு அர்ஜுன்!

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெறும் முதல் தெலுங்கு நடிகர்….நெகிழ்ச்சியில் அல்லு அர்ஜுன்!

-

- Advertisement -

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவில் நடைபெறும் தேசிய விருது வழங்கும் விழாவில் திரை உலக பிரபலங்கள் அனைவரையும் கௌரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. நடிப்பு, நடனம், இசை, பாடல், சண்டை காட்சிகள் உள்ளிட்ட பல பிரிவுகளின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் தற்போது 69 ஆவது தேசிய விருது வழங்கும் விழாவில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்தார்.

we-r-hiring

அதில், கடந்த 2021 இல் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு சினிமாவில் தேசிய விருதை பெறும் முதல் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தான். இந்த விருது அறிவித்ததும் அல்லு அர்ஜுனை அவரின் குடும்பத்தார்கள் அனைவரும் கட்டிப்பிடித்து தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

அல்லு அர்ஜுனும் மிகுந்த மகிழ்ச்சியில் கண் கலங்கி நிற்கிறார். அது சம்பந்தமான வீடியோவும் புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே அல்லு அர்ஜுனுக்கு புஷ்பா படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது கிடைக்கும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி இந்த விருது அறிவிக்கப்பட்டது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்தியுள்ளது.

MUST READ