அல்லு அர்ஜூனின் புஷ்பா 2… இந்தியில் கோடிக்கணக்கில் வியாபாரம்…
- Advertisement -
அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா 2 திரைப்படத்தின் உரிமை, இந்தியில் கோடிக்கணக்கில் விற்கப்பட்டுள்ளது

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளவர் அல்லு அர்ஜூன். ஆரம்ப காலத்தில் கமர்ஷியல் படங்களை மட்டுமே கொடுத்த கலவையான விமர்சனங்களை பெற்று வந்த அல்லு அர்ஜூன் தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு அல்லு அர்ஜூன் நடிப்பில் வௌியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் புஷ்பா தி ரைஸ். இப்படம், அல்லு அர்ஜூனின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இப்படத்தை, பிரபல தெலுங்கு இயக்குநர் சுகுமார் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருப்பார். சுனில், ஃபகத் பாசில், பிரசாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்தித்தில் நடித்திருந்தனர். தேவி 2 பிரசாத் படத்திற்கு இசை அமைத்திருந்தார். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது, புஷ்பா தி ரூல் என்ற பெயரில் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்திலும் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, சுனில், ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடிக்கின்றனர். மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

இப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் உரிமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, புஷ்பா 2 படத்தின் இந்தி பதிப்பு உரிமை சுமார் 200 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.