Homeசெய்திகள்சினிமாஅனிமல் படத்தின் வசூல் குறைவுக்கு காரணம் இதுதான்... தயாரிப்பாளர் விளக்கம்...

அனிமல் படத்தின் வசூல் குறைவுக்கு காரணம் இதுதான்… தயாரிப்பாளர் விளக்கம்…

-

- Advertisement -
அனிமல் திரைப்படம் வெளியான தொடக்கத்தில் வசூல் குறைந்ததற்கான காரணம் குறித்து தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகம் மட்டுமன்றி மொத்த திரையுலகிலும் பிரபலமானவர் சந்தீப் ரெட்டி வங்கா. இதையடுத்து, அர்ஜூன் ரெட்டி படத்தை இந்தியில் கபீர் சிங் என்று ரீமேக் செய்தார். இதில், கியாரா அத்வாணி, ஷாகித் கபூர் ஆகியோர் நடித்திருந்தனர். சந்தீப் ரெட்டி இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் அனிமல். இப்படத்தில் பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

அப்பா மகன் பாசத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் பல தரப்பட்ட விமர்சனங்களை பெற்றாலும், வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதுவரை 800 கோடி ரூபாய்க்கு மேல் அனிமல் திரைப்படம் வசூலித்து மேலும், வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இருப்பினும் படம் வெளியான தொடக்கத்தில் வசூல் அவ்வளவாக இல்லை. ஆனால், தற்போது ஆயிரம் கோடி வசூலை படம் நெருங்கி வருகிறது.

இந்நிலையில், அனிமல் படத்தின் வசூல் குறித்து தயாரிப்பாளர் பிரனாய் முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். அதன்படி, முதல் வாரத்தில் திரையரங்குகள் கிடைக்காததால், சுமார் 40 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. வார இறுதியில் ஏ சான்றிதழ், படத்தின் நீளம் காரணங்களால் படத்தின் வசூல் குறைந்தது என அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

MUST READ