Homeசெய்திகள்சினிமாகேம் சேஞ்சர் படம் குறித்து பேச தடை... படத்தின் நாயகி அஞ்சலி தகவல்...

கேம் சேஞ்சர் படம் குறித்து பேச தடை… படத்தின் நாயகி அஞ்சலி தகவல்…

-

கேம் சேஞ்சர் படம் குறித்து பேத தடை விதிக்கப்பட்டுள்ளதாக நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.

ராம் இயக்கி கற்றது தமிழ் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆகியவர் நடிகை அஞ்சலி. அடுத்து, வசந்த பாலன் இயக்கி வெற்றி பெற்ற அங்காடித் தெரு படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அஞ்சலியின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. மேலும், நடிகை அஞ்சலியை முன்னணி நடிகையாகவும் கோலிவுட் திரையுலகில் உயர்த்தியது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு எங்கேயும் எப்போதும்,அஜித் நடித்த மங்காத்தா, ஆகிய பட படங்களில் அடுத்தடுத்து நடித்து முன்னணி நாயகியாக உயர்ந்தார்.

ராம் இயக்கியிருக்கும் ஏழு மலை ஏழு கடல் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் தெலுங்கில் கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அத்துடன் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியிருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ராம்சரண் நாயகனாக நடிக்க கியாரா அத்வாணி கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், திரைப்பட நிகழ்ச்சியில் கேம் சேஞ்சர் படம் குறித்து அஞ்சலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அஞ்சலி, கேம் சேஞ்சர் படம் குறித்து பேச தற்போது எங்களுக்கு அனுமதி இல்லை, படம் குறித்து பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஷங்கர் அல்லது தயாரிப்பாளர் தில் ராஜூ தான் படம் குறித்த பேச வேண்டும் என்று அஞ்சலி தெரிவித்துள்ளார்.

MUST READ