spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகராக இருப்பது மகிழ்ச்சி... நடிகர் அர்ஜூன் தாஸ் பேட்டி...

நடிகராக இருப்பது மகிழ்ச்சி… நடிகர் அர்ஜூன் தாஸ் பேட்டி…

-

- Advertisement -
நடிகராக இருப்பது தான் மகிழ்ச்சி என்று அர்ஜூன் தாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் அர்ஜூன் தாஸ். அவரது விசித்திரமான வசீகரிக்கும் குரலே அவருக்கு பல கோடி ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது. துருவ நட்சத்திரம் படத்தில் ஒலித்த அவரது குரலை கேட்டு மிரண்ட ரசிகர்கள் ஏராளம். கைதி திரைப்படத்தில் வில்லனாக நடித்து அறிமுகமானார் நடிகர் அர்ஜூன் தாஸ். முதல் படத்திலேயே வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை மிரட்டி எடுத்தார்.தொடர்ந்து மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களிலும் வில்லனாக நடித்திருந்தார். இதையடுத்து, அந்தகாரம் படத்தில் நாயகனாக அறிமுகமானார்.

we-r-hiring
இதைத் தொடர்ந்து வசந்த பாலன் இயக்கிய அநீதி படத்தில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தார். அடுத்து, காளிதாஸ் ஜெயராமுடன் இணைந்து போர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, சாந்தகுமார் இயக்கும் புதிய படத்தில் அர்ஜூன் தாஸ் நடித்து முடித்துள்ளார். இபப்டத்திற்கு ரசவாதி என்று தலைப்பு வைத்துள்ளனர். இத்திரைப்படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வௌியாக உள்ளது.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அர்ஜூன் தாஸிடம், நடிகராக இருப்பது மகிழ்ச்சியா ? இல்லையா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், நடிகராக இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி. திரைத்துறையில் பணியாற்றுவது நிறைவாக உள்ளது. இது மிகவும் சந்தோசம் தான் என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ