Homeசெய்திகள்சினிமாபிக்பாஸ் நடிகையிடம் தவறாக நடந்து கொண்ட பிரபல தெலுங்கு நடிகர்... உண்மையை உடைத்த நடிகை...

பிக்பாஸ் நடிகையிடம் தவறாக நடந்து கொண்ட பிரபல தெலுங்கு நடிகர்… உண்மையை உடைத்த நடிகை…

-

பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பிக்பாஸ் நடிகை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சின்னத்திரையில் மிகவும் பரபரப்புடன், எதிர்பார்க்காத திருப்பங்களுடன் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 7. தமிழகத்தில் இந்நிகழ்ச்சிக்கு லட்சக் கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்நிகழ்ச்சியை தினந்தோறும் ஆர்வமுடன் கண்டு ரசிக்கின்றனர். உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகினார். இதில் பிரபல நடிகை விசித்திரா, வினுஷா, ரவீனா, விஷ்ணு, மாயா, பூர்ணிமா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் தொகுப்பாளினி அர்ச்சனா வெற்றி பெற்று கோப்பை வென்றார். இந்நிகழ்ச்சியில் முக்கியமான நபர் பிரபல தமிழ் நடிகை விசித்திரா. இவர் தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நாயகியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது நடிகை விசித்திரா தன்னிடம் ஒரு நடிகர் தவறாக நடந்து கொண்டதாக பேசியிருப்பார். தெலுங்கு படப்பிடிப்பின்போது அவர் அறைக்கு வரக்கூறியதாகவும், அவருடைய ஆட்கள் அறை கதவை இரவு முழுவதும் தட்டியதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக புகார் அளிக்கச் சென்றபோது, மாஸ்டரும் தன்னை அறைந்துவிட்டார் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், அந்த நடிகர் தெலுங்கு பிரபலம் பாலகிருஷ்ணா தான் என்றும், பாலவடிவி பாசு படப்பிடிப்பின்போது தான் இது நடந்தது என்றும் ரசிகர்கள் யூகித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், வெளியே வந்த விசித்திராவிடம் பேட்டி எடுத்தபோது, ரசிகர்கள் சரியாக கணித்துள்ளனர், உண்மையை கண்டுபிடித்துள்ளனர் என தெரிவித்து உள்ளார். மேலும், ஸ்டண்ட் மாஸ்டர் அ.விஜய் என்றும், புகாரை எடுக்க மறுத்த சங்க தலைவர் ராதா ரவி என்பதும தெரியவந்துள்ளது. மேலும் இதனால் தான், சினிமாவிலிருந்து வௌியேறியதாகவும் தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

MUST READ