சலார் 2-ம் பாகத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகை
- Advertisement -
சலார் இரண்டாம் பாகத்தில் பிரபல பாலிவுட் நடிகை இணைவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்த சலார் படம் பத்து நாட்களுக்கு முன்பாக பான் இந்தியா படமாக திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்க, பிருத்விராஜ், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி, பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆனால், தெலுங்கு மாநிலங்களில் மட்டுமே இத்திரைப்படம் பலத்த வரவேற்பை பெற்றது. தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் வட மாநிலங்களில் எதிர்பார்த்த அளவு வரவேற்பும், வசூலும் கிடைக்கவில்லை. இருப்பினும், உலகம் முழுவதும் 625 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கு பகுதிகள் தவிர பிற மாநிலங்களில் வசூல் அதிகம் இல்லையென்றாலும் வெளிநாடுகளில் சலார் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் 600 கோடி வசூலைக் கடந்துள்ளதாகச் சொல்கிறார்கள். படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து ரசிகர்களுக்கு நடிகர் பிரபாஸ் நன்றி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சலார் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சலார் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது வரை அதுதொடர்பான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், இத்திரைப்படத்தில், பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வாணி இணைவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.