Homeசெய்திகள்சினிமாபிரசவத்தை நினைத்து பயம்... நடிகை தீபிகா படுகோன் பேட்டி...

பிரசவத்தை நினைத்து பயம்… நடிகை தீபிகா படுகோன் பேட்டி…

-

- Advertisement -
பாலிவுட் திரையுலகில் டாப் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங். இவர்கள் இருவரும் முன்னணி நடிகர், நடிகைகளாக இந்தி திரையுலகில் வலம் வருகின்றனர். இருவரும் இணைந்து பாஜிரா மஸ்தானி, ராம் லீலா, என பல படங்களில் ஜோடிகளாக நடித்திருக்கின்றனர். இவர்கள் ராம் லீலா படத்தில் ஒன்றாக இணைந்து நடிக்கும்போதே, காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு இத்தாலியில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த பிறகும் இருவரும் பாலிவுட்டில் பிசியாக தனித்தனியாக நடித்து வருகின்றனர். தீபிகா படுகோனும் பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார். அவரது நடிப்பில் கடந்த ஆண்டு பதான், ஜவான் திரைப்படங்கள் வெளியாகின. இந்த இரண்டு திரைப்படங்களுமே சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக ஃபைட்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து சிங்கம் அகெய்ன் திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். மேலும் அவர் நடித்துள்ள கல்கி திரைப்படம் வரும் ஜூன் 27ம் தேதி வெளியாகிறது.

அண்மையில் தீபிகாவும், ரன்வீர் சிங்கும் தாங்கள் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தனர். மேலும், செப்டம்பர் மாதத்தில் குழந்தையை எதிர்பார்ப்பதாகவும் கூறியிருந்தனர். இந்நிலையில், சமீபத்தில் பேட்டி அளித்த நடிகை தீபிகா படுகோன், எனது கர்ப்பிணி வாழ்வை அனுபவித்து வருகிறேன், முன்பு எடை கூடாமல் இருக்க சாப்பிடாமல் தவிர்த்த உணவுகளை தற்போது சாப்பிட்டு வருகிறேன். முடிந்தவரை உணவகத்தில் சாப்பிடுவதை தவிர்த்த வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட்டு வருகிறேன். இருப்பினும் பிரசவம் குறித்து பயமாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ