பாமகவில் இருந்து வழக்கறிஞர் பாலுவை நீக்கப்பட்டிருப்பதன் மூலம் ராமதாஸ் – அன்புணி இடையிலான மோதல் இன்னும் தொடர்வது உறுதியாகி உள்ளதாக திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.
பாமகவில் இருந்து வழக்கறிஞர் பாலு நீக்கம் மற்றும் 8 மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை அன்புமணி அறிவித்துள்ளதன் பின்னணி குறித்து திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- பாமகவில் மருத்துவர் ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதலின் தொடர்ச்சியாக சமூகநீதி பேரவையின் தலைவர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் பாலு நீக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி சென்று, ராமதாசை சந்தித்து இருந்தார். இதுதொடர்பாக பிரபல நாளிதழ் ஒன்றிலும் செய்தி வெளியாகி இருந்தது. அதில் அன்புமணிக்கும், தனக்குமான பிரச்சினை சுமூகமாக முடிவுக்கு வந்துவிடும். அமித்ஷா சொன்னது உண்மைதான் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த பாமகவின் மிக முக்கியமான முகமாக உள்ள வழக்கறிஞர் பாலுவை, ராமதாஸ் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளார்.
அப்போது, ராமதாஸ் தனது நிலைப்பாட்டில் மிகவும் தெளிவாக உள்ளார். மருத்துவர் ராமதாஸ் தனது முதல் செய்தியாளர் சந்திப்பின்போதே மிகவும் தீர்மானமாக சொல்லிவிட்டார். இந்த பிரச்சினைக்கு தீர்வு என்ன என்றால்? அன்புமணி பாமகவின் செயல் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும் என்பதுதான். கட்சி அதன் போக்கில் இயங்கும். கூட்டணி குறித்த முடிவுகளை தானே எடுப்பதாகவும், கட்சியை எப்படி மீட்டுருவாக்கம் செய்வது என்று தனக்கு தெரியும் என்றும் கட்சியின் நிறுவனர் என்கிற நிலையில் இருந்து ராமதாஸ் சொன்னார். அந்த நிலையில் இருந்து அவர் இன்னும் பின்வாங்கவில்லை என்றுதான் தெரிகிறது.
இதனினுடைய தொடக்கப்புள்ளியாக இருந்தது கரூர் மாவட்ட பாமக செயலாளர் நீக்கம் தான். ஏனென்றால் அவர் சமூக வலைதளத்தில் செயல் தலைவர் அன்புமணி என்று பதிவிட்டிருந்ததால் அவர் மீது அன்புமணி நடவடிக்கை மேற்கொணடார். ஆனால் கரூர் மாவட்ட செயலாளர், தன்னை நீக்குவதற்கு அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என்று கூறுகிறார். அன்புமணி, பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தன்னை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு அதிகாரம் இல்லை என்று அன்புமணி சொல்கிறார். அன்புமணிக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்று இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அவர் எப்படி மாவட்ட செயலாளரை நீக்க முடியும். அதற்கான அதிகாரம் அன்புமணிக்கு உள்ளதா? இந்த பிரச்சினை அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்துவிட்டதாக கருதுகிறேன். ராமதாஸ் தன்னுடைய நிலைப்பாட்டில் மிகவும் தெளிவாக உள்ளார். அவருக்கு இருக்கும் ஒரே பிரச்சினை என்ன என்றால்? பாமக வெற்றி பெறும் அணியில் இடம்பெற வேண்டும். அதுவும் தன்னுடைய ஏற்பாட்டில் இருக்க வேண்டும். கூட்டணி பேச்சுவார்த்தைகளை தானே நடத்துகிறேன். நீ யார் பேச்சுவார்த்தை நடத்தி, என்னிடம் தகவல் சொல்வதற்கு என்று எண்ணுகிறார். அன்புமணி தொடர் தோல்விகளை தருகிற கூட்டணியில் போய் நிற்கிறார். அங்கு போய் நிற்காதே. பாஜக நாளைக்கு வெற்றி பாதைக்கு வந்துவிட்டால் அங்கு போய் நிற்கலாம்.
திமுக – பாஜகவுடன் கூட்டணி வைத்ததே என்று விமர்சனத்தை முன்வைப்பார்கள். திமுக குறைந்தபட்ச செயல்திட்டம் கொண்டுவந்து, அதனை நடைமுறைப் படுத்துவோம் உத்தரவாதம் தந்த பின்னரே கூட்டணியில் சேர்ந்தோம். ஆனால் நீங்கள் எப்போது போய் நின்றீர்கள். வாழப்பாடி ராமமூர்த்தி, வைகோ, ஜெயலலிதா என எல்லோரும் சேர்ந்து போய் பாஜகவுடன் நின்றபோது இதுபோன்ற குறைந்தபட்ச செயல்திட்டம் போட்டீர்களா? இல்லை. எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு போய் கூட்டணி சேர்ந்தீர்கள். அப்போது ராமதாசுக்கு என்ன பெரிய சமூகநீதி பார்வை உள்ளது? அவருக்கு ஈகோ தான் பிரச்சினை. அங்கே அன்புமணியின் ஈகோதான் பிரச்சினையாகும். குருமூர்த்தி சந்திப்பின்போது சுமூகமான நிலை ஏற்பட்டுவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் நான் அப்போதே அதனை மறுத்தேன். ஏன் என்றால் உடன்பாடு ஏற்பட்டிருந்தால், அன்புமணியை நான் பார்க்கவில்லை என்று குருமூர்த்தி சொல்லி இருக்க மாட்டார்.
குருமூர்த்தி, ரஜினியை சந்தித்துவிட்டு வந்தபோது அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பதாக கம்பீரமாக பேட்டி அளித்தார். ஆனால் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்பது வேறு. ஓபிஎஸ்-ஐ நான்தான் தர்மயுத்தத்திற்கு போய் உட்கார சொன்னேன் என்று எல்லாவற்றையும் வெளிப்படையாக சொன்னார். ஏன் இந்த விவகாரத்தில் வெளிப்படையாக பேசவில்லை. அதனால்தான் அன்புமணியை சந்திக்கவே இல்லை என்று கடைந்தெடுத்த பொய்யை சொல்லுகிறார். குருமூர்த்தி முன்னால் சென்று பேசி சரி செய்யட்டும், அன்புமணி பின்னால் போகட்டும் என்று செட் பண்ணியதே பாஜகதான். இவை எல்லாம் ஒரு ஏற்பாட்டின் அடிப்படையில்தான் நடைபெற்றது. அந்த ஏற்பாடு வெற்றி பெறவில்லை. அதனால்தான் அமித்ஷா வெறுங்கையோடு திரும்பி சென்றார். இல்லாவிட்டால் பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டு, அந்த அறிவிப்பையும் மேடையில் வெளியிட்டிருப்பார் அமித்ஷா.
அன்புமணி, 8 மாவட்டங்களின் பொதுக்குழுவை கூட்டுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே அன்புணி மாவட்ட வாரியாக பாமக நிர்வாகிகளை சந்தித்தார். அதற்கு பொதுக்குழு என்று பெயர் வைக்கிறார். உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. இன்றைக்கு 10 மாவட்டங்களின் பெயர்களை அறிவிக்கிறீர்கள். அப்படி என்றால் நேரடியாக மாநில பொதுக்குழு என்று அறிவிக்க வேண்டியதுதானே. அதில் என்ன பிரச்சினை உங்களுக்கு? ஏனென்றால் உங்களால் அந்த அறிவிப்பை வெளியிட முடியாது. அதற்கு காரணம் பாமகவின் சட்ட விதிகளின் படி பொதுக்குழு, செயற்குழுவை பாமக நிறுவனரின் ஒப்புதல் இல்லாமல் கூட்ட முடியாது. ராமதாசை தவிர்த்துவிட்டு நீங்கள் பொதுக்குழுவை கூட்ட முடியாது. இந்நிலையில், மாவட்ட பொதுக்குழுவை கூட்டுவதன் மூலம் என்ன நடந்துவிடும்? ராமதாஸ் உங்களின் அடிப்படையையே தகர்த்துவிட்டார். தலைவர் பொறுப்பில் இருந்து உங்களை நீக்கிவிட்டு, செயல் தலைவர் ஆக்கிவிட்டார். மாவட்ட பொதுக்குழுவை கூட்டி வசனம் பேசவும், ஊடகங்கள் மூலம் இலவசமாக மார்க்கெட்டிங் கிடைக்கும். அந்த கூட்டங்களை வைத்து வேறு ஒரு பயனும் கிடையாது.
அன்புமணிக்கு உண்மையிலேயே அதிகாரம் இருக்கிறது என்றால்? அவர் மருத்துவர் ராமதாசை கட்சியில் இருந்து நீக்க வேண்டியதுதானே. உங்களால் அதை செய்ய முடியுமா? இன்னும் சொல்லப் போனால் அன்புமணி திரும்பி வர முடியாத நிலையை ராமதாஸ் உருவாக்கிவிட்டார். நீங்கள் திருப்பி வந்தாலும் ராமதாஸ் தான் வின்னர் என்கிற நிலையை உருவாக்குவார். அதனால் மாவட்ட பொதுக்குழு கூட்டங்கள் எந்த வித பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாது. கட்சிக்குள் இனிமேல் எந்த வித முன்னெடுப்புகளையும் அன்புமணியால் இனிமேல் செய்ய முடியாது என்பதுதான் நிதர்சனம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.