Homeசெய்திகள்சினிமாநான் இரண்டு பேரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசைப்பட்டேன்..... நடிகர் தனுஷ்!

நான் இரண்டு பேரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசைப்பட்டேன்….. நடிகர் தனுஷ்!

-

நடிகர் தனுஷ், கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு ராயன் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். நான் இரண்டு பேரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசைப்பட்டேன்..... நடிகர் தனுஷ்!மேலும் பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார் தனுஷ். இந்நிலையில் நடிகர் தனுஷ் இசை இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷ் இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பதும் இளையராஜாவாக நடிப்பது தனுஷின் நீண்ட நாள் கனவு என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் தனுஷின் கனவு நனவாகியுள்ளது. அதன்படி இளையராஜாவின் பயோபிக் படத்தை கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார். இந்த புதிய படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. நான் இரண்டு பேரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசைப்பட்டேன்..... நடிகர் தனுஷ்!இந்த விழாவில் தனுஷ், இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொள்ள நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இவர்கள் மூவரும் இணைந்து படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் தனுஷ் ஆர்மோனிய பெட்டியை கையில் வைத்துக்கொண்டு மெட்ராஸ் வருவது போன்று காண்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பேசிய தனுஷ், “நான் இளையராஜா சாரின் தீவிர ரசிகன், பக்தன்.

நிறைய பேருக்கு இளையராஜாவின் இசை எல்லாத்தையும் மறந்து தூங்க வைக்கும். ஆனால் நான் நிறைய நாட்கள் இளையராஜாவாக நடித்தால் எப்படி இருக்கும் என் நடித்து பார்த்து தூக்கம் இல்லாமல் இருந்திருக்கிறேன். இரண்டு பேரின் வாழ்க்கை வரலாற்றில் தான் நான் நடிக்க விரும்பினேன். ஒன்று இசைஞானி இளையராஜா, மற்றொன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஒன்று இப்போது நடந்து கொண்டிருக்கிறது. நிறைய பேர் சொல்வார்கள் இளையராஜாவின் கதாபாத்திரத்தில் நடிப்பது ஒரு சவாலாக இருக்கும் என்று. ஆனால் இப்போதும் அப்படி எனக்கு தெரியவில்லை. இறந்தால் அந்த இசை நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை சொல்லும்” என்று தொடர்ந்து விழாவில் பேசியுள்ளார் தனுஷ்.

MUST READ