Homeசெய்திகள்சினிமாதுருவ் விக்ரம், மாரி செல்வராஜ் கூட்டணியின் புதிய படம்.....ஷூட்டிங் எப்போது?

துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் கூட்டணியின் புதிய படம்…..ஷூட்டிங் எப்போது?

-

துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து தனது அடுத்த படமான மகான் படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார்.இவருக்கு இந்த இரு படங்களுமே ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

மேலும் துருவ் விக்ரம் தனது மூன்றாவது படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தை இயக்குனர் பா. ரஞ்சித் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க  இருக்கிறார். இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு பிரபல கபடி வீரரின் வாழ்க்கை வரலாறை படமாக உருவாக்க இருப்பதாக கூறப்பட்டது.

அதன்படி தற்போது துருவ் விக்ரம் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படம் கபடி வீரர் மனத்தி பி கணேஷ் அவர்களின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் படப்பிடிப்புகள் தூத்துக்குடியில் உள்ள கிராமப் பகுதியில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்கியுள்ள வாழை என்ற மற்றொரு திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

MUST READ