Homeசெய்திகள்சினிமாஅடுத்த 3 ஆண்டுகளில் ஹாலிவுட்... இயக்குநர் அட்லீ உறுதி...

அடுத்த 3 ஆண்டுகளில் ஹாலிவுட்… இயக்குநர் அட்லீ உறுதி…

-

பிரபல இயக்குநர் அட்லீ அடுத்த 3 ஆண்டுகளில் ஹாலிவுட்டிற்ககு நிச்சயம் செல்வேன் என தெரிவித்துள்ளார். 

இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக பல படங்களில் பணிபுரிந்து, பின்னர் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் அட்லீ. முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அட்லீ இரண்டாவது படத்திலேயே கோலிவுட்டின் டாப் ஸ்டாரான விஜய்யுடன் இணைந்தார். விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கிறார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டே மெர்சல் திரைப்படத்தை இயக்கினார் அட்லீ.

இதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு பிகில் படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தின் மூலம் அவர் பாலிவுட்டுக்கும் என்ட்ரி கொடுத்தார். நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி ஆகியோர் நடித்த இத்திரைப்படம் சுமார் ஆயிரத்து 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் மாபெரும் ஹிட் படமாக அமைந்தது.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அட்லீ, பாலிவுட்டை அடைய தனக்கு 8 ஆண்டுகள் தேவைப்பட்டன. அதேபோல அடுத்த 3 ஆண்டுகளில் என்னை ஹாலிவுட்டில் பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். இயக்கம் மட்டுமன்றி, தயாரிப்பிலும் அட்லீ கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இந்தியில் தெறி படத்தின் இந்தி ரீமேக்கை தயாரித்து வருகிறார்.

MUST READ