இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். அந்த வகையில் குறுகிய நாட்களிலேயே ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தவர். இவர் மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, அதைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதை தொடர்ந்து இவர் ரஜினியை வைத்து கூலி திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படம் ரஜினியின் 171 வது படமாகும். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் தன்னுடைய படங்களில் தனக்கென தனி ஒரு ஸ்டைலை பயன்படுத்துபவர். அந்த வகையில் ரஜினியும், லோகேஷ் கனகராஜும் இணைந்துள்ள கூலி படம் எப்படி இருக்கும்? என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அது மட்டுமில்லாமல் இந்த படத்தில் ரஜினி தவிர நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சௌபின் சாகிர் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது, அமீர்கான் இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருப்பது, பூஜா ஹெக்டே ஸ்பெஷல் பாடலுக்கு நடனமாடி இருப்பது போன்றவை இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. அதே சமயம் இந்த படம் 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இவர் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Hey guys!
I’m taking a small break from all the social media platforms until #Coolie‘s promotions
With Love,
Lokesh Kanagaraj 🤜🏼🤛🏼— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 22, 2025
அதன்படி எக்ஸ் தள பக்கத்தில், “கூலி படத்தின் ப்ரோமோஷன் வரை தற்காலிகமாக சமூக வலைதளங்களில் இருந்து பிரேக் எடுத்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
பொதுவாக லோகேஷ் கனகராஜ், தன்னுடைய அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்குவதற்காக தான் சமூக வலைதளங்களில் இருந்து பிரேக் எடுத்துக்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.