- Advertisement -
நடிகர் ரஜினிகாந்த் வைத்து ஜெயிலர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார், அடுத்ததாக தெலுங்கு பக்கம் திரும்ப உள்ளார்.
தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். கோலமாவு கோகிலா படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி இருந்தார். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. வசூலையும் வாரிக்குவித்தது. டாக்டப் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார். ஆனால், பீஸ்ட் கலவையான விமர்சனம் பெற்றது.
