இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே நல்ல பெயரையும் புகழையும் பெற்றார். அதைத்தொடர்ந்து இவர் விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் ஆகிய வெற்றி படங்களை இயக்கினார். அதேசமயம் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்து ஜவான் படத்தையும் இயக்கி அசால்ட் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து இவர் என்ன படம் இயக்கப் போகிறார்? என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அதன்படி பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அட்லீ தன்னுடைய அடுத்த படம் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக இருக்கும் என கூறியிருந்தார். இந்த தகவல் அட்லீயின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 8) அட்லீயின் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க போகிறார் எனவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படமானது ஹாலிவுட் ரேஞ்சில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை இயக்குனர் அட்லீ இரண்டு பாகங்களாக இயக்க திட்டமிட்டு இருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது இந்த படம் சுமார் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம். அதில் அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் ஆகிய இருவருக்கும் சரிசமமாக ரூ. 110 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. இது தவிர வருகின்ற லாபத்தில் அட்லீ மற்றும் அல்லு அர்ஜுனுக்கும் பங்கு இருக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.
- Advertisement -