Homeசெய்திகள்சினிமாபெண்களை புனிதர்களாக பார்க்க வேண்டாம்... மனிதர்களாக பாருங்கள்..! பேட்கேர்ள் இயக்குநர்

பெண்களை புனிதர்களாக பார்க்க வேண்டாம்… மனிதர்களாக பாருங்கள்..! பேட்கேர்ள் இயக்குநர்

-

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில், அவரது உதவியாளர் வர்ஷா பரத் இயக்கத்தில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா நடிப்பில் உருவாகி உள்ள படம் பேட் கேர்ள். சென்னையில் நடந்த இப்பட விழாவில் பேசிய வெற்றிமாறன் ‘‘ஆடுகளம் படப்பிடிப்பு சமயத்தில் என்னிடம் பெண் உதவி இயக்குனர்கள் கிடையாது. அப்போது அது குறித்து கேள்வி கேட்டார் ஹீரோயின் டாப்சி.

பின்னர், ஒரு தடவை உங்கள் படத்தில் ஆண்கள் அதிகம் இருக்கிறார்கள். பெண் கேரக்டர் பற்றி அதிகம் ஏன் பேசுவதில்லை என்று கேட்டார். நானும் யோசித்தேன். பிற்காலத்தில் என்னிடம் உதவியாளராக வர்ஷா சேர்ந்தார். அப்போது சென்னையில் உள்ள என் ஆபீசுக்கு வந்த டாப்சியிடம் ‘என் ஆபீசிலும் பெண் உதவி இயக்குனர் இருக்கிறார்’ என்று சொல்லி, அவரை அறிமுகப்படுத்தினேன். அப்போதிலிருந்தே டாப்சி, வர்ஷா இடையே நட்பு ஏற்பட்டது.

இந்த படத்தை வழங்குகிறார் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப். அவர் எனக்கும் விசாரணை பட சமயத்தில் உதவினார். அந்த படம் பல நாடுகளுக்கு சென்று விருது பெற்றது. இந்த கதையை அழகாக எடுத்து இருக்கிறார் வர்ஷா. இதில் நடித்த சாந்திபிரியா படம் அருமை, பல நாடுகளுக்கு சென்று விருது வாங்கும். தேசியவிருது கூட கிடைக்கும் என்றார். உடனே வர்ஷாவை அழைத்து உன்னை விட அவர் படத்தை அதிகம் நம்புகிறார் என்றேன். ரோட்டர் டாம் திரைப்படவிழாவில் ஒரு முக்கியமான பிரிவில் இந்த படம் போட்டியிடுகிறது. பிரபல இந்தி இசையமைப்பாளர் அமித் திரிவேதி இந்த படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்’’ என்றார்

விழாவில் பேசிய டாப்சி, ‘என்னை தனது பட விழாக்களுக்கு அழைத்தது இல்லை. இந்த பட விழாவுக்கு அழைத்தார். நானும் சென்னை வந்தேன். பெண்களை பற்றி அதிகம் படங்கள் வருவது இல்லை ஏன் என்று யோசி்த்து இருக்கிறேன். ஒரு பெண் இயக்குனர் இயக்கத்தில் ஒரு பெண்ணை பற்றிய இந்த படம் வெற்றி பெறும்’ என்றார்.

கடைசியாக பேசிய இயக்குனர் வர்ஷா ‘‘நான் பல கதைகளை வெற்றிமாறன்சாரிடம் சொல்வனே். இந்த கதையை கேட்டவுடன் அவர் படமாக்க சம்மதித்தார். பொதுவாக, நம் பெண்களை கடவுளாக, தாய் ஆக, தேவதையாக, உயர்வான இடத்தில் வைத்து படம் பண்ணுகிறோம். அவர்களை நார்மலாக காண்பிக்கிறது இந்த கதை. பெண்களை புனிதர்களாக பார்க்க வேண்டாம். மனிதர்களாக பாருங்கள் என்கிறது கதை. படம் குறித்து பலரும் பலவிதமாக பேச, இயக்குனர் அனுராக் காஷ்யப் ரொம்பவே உற்சாகம் கொடுத்தார். ’’ என்றார்.

MUST READ