பிரபல நடிகரான சிம்பு, கடந்த சில வருடங்களுக்கு முன்பாக வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் கொரோனா குமார் என்ற படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். இந்தப் படத்தை ஜூங்கா, காஷ்மோரா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கம் இருந்தார். பின்னர் ஒரு சில காரணங்களால் வேல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஐசரி கே கணேஷ், சிம்பு ஆகிய இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இப்படம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் கைவிடப்பட்ட இந்த கொரோனா குமார் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என கிட்டத்தட்ட உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக அதிதி சங்கர் நடிக்க இருப்பதாகவும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. இருப்பினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
விஷ்ணு விஷால், ஏற்கனவே இயக்குனர் கோகுல் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இந்தப் படம் வேறொரு கதைக்களத்தில் உருவாக இருக்கிறது. கொரோனா குமார் படத்தை முடித்த பின்னர் இந்த படம் தொடங்கப்படும் என்று சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.