தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை கரும்பு கொடுத்து ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.
தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் தனுஷ் உடன் இணைந்து சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், நிவேதிதா சதீஷ், அதிதி பாலன், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்ய ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு பிறகும் நேற்று கேப்டன் மில்லர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது.

அந்த வகையில் பிரிட்டிஷ் காலகட்டத்தில் சுதந்திரத்திற்காக போராடிய சமயத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் கோயிலில் நுழையும் உரிமையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் கேப்டன் மில்லர் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. மூன்று வருடங்களாக தனுஷ் தாடியுடன் ஒரே கெட்டப்பில் இருந்த நிலையில், படக்குழுவினர்களும் தங்களின் கடின உழைப்பை கேப்டன் மில்லருக்காக அர்ப்பணித்துள்ளனர். அதே சமயம் கேப்டன் மில்லர் படத்திற்காக நீண்ட நாட்கள் காத்திருந்த ரசிகர்களும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான கேப்டன் மில்லரை
கள்ளக்குறிச்சியில் தனுஷ் ரசிகர்கள் பலரும் படம் பார்க்க வருபவர்களுக்கு கரும்பு கொடுத்து கொண்டாடியுள்ளனர். இது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் புதுச்சேரியில் 108 தேங்காய் உடைத்தும் பாலாபிஷேகம் செய்தும் தனுஷை கொண்டாடினர்.