செல்வராகவன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார் செல்வராகவன். அந்த வகையில் சமீபத்தில் வெளியான சொர்க்கவாசல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் படம் இயக்கத் தொடங்கியுள்ளார் செல்வராகவன். அதன்படி இவர் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறாராம். இது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இயக்குனர் செல்வராகவன் புதிய போஸ்டருடன் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் இந்த புதிய படத்திற்கு மெண்டல் மனதில் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Love ❤️ At its best ❤️ pic.twitter.com/0pFfbtNKbs
— selvaraghavan (@selvaraghavan) December 13, 2024

மேலும் இந்த படத்தை தயாரிப்பதும் இதற்கு இசையமைப்பதும் ஜி.வி. பிரகாஷ் தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்தது இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே செல்வராகவன், ஜி.வி. பிரகாஷ் ஆகிய இருவரும் இணைந்து ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்களில் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.