Homeசெய்திகள்சினிமாகதையே இல்லனாலும் அவருடன் நடிப்பேன்.... நடிகை கேத்தரின் தெரசா பேட்டி!

கதையே இல்லனாலும் அவருடன் நடிப்பேன்…. நடிகை கேத்தரின் தெரசா பேட்டி!

-

- Advertisement -

நடிகை கேத்தரின் தெரசா தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருபவர். கதையே இல்லனாலும் அவருடன் நடிப்பேன்.... நடிகை கேத்தரின் தெரசா பேட்டி!இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் நீயா, வந்தா ராஜாவா தான் வருவேன், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அடுத்தது இவர், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் கேங்கர்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கேத்தரின் தெரசா சுந்தர்.சி இயக்கத்தில் இரண்டாவது முறை நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லாமல் கேங்கர்ஸ் திரைப்படத்தில் ‘குப்பன்’ என்ற பாடலுக்கு கிளாமராக நடனமாடியுள்ளார்.
அவ்னி சினிமாக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள வடிவேலு இந்த படத்தில் காமெடியனாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு சி. சத்யா இசையமைத்துள்ளார். கதையே இல்லனாலும் அவருடன் நடிப்பேன்.... நடிகை கேத்தரின் தெரசா பேட்டி!காமெடி கலந்த ஜானரில் உருவாகி இருக்கும் இப்படம் வருகின்ற ஏப்ரல் 24ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக தயாராகி வருகிறது. அதற்கான ப்ரோமோஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் படத்திலிருந்து அடுத்தடுத்த பாடல்களும், ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. கதையே இல்லனாலும் அவருடன் நடிப்பேன்.... நடிகை கேத்தரின் தெரசா பேட்டி!இந்நிலையில் நடிகை கேத்தரின் தெரசா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த பேட்டியில், ‘கதையே இல்லை என்றாலும் எந்த நடிகருடன் நடிக்க ஒப்புக் கொள்வீர்கள்’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு யோசிக்காமல் ‘அஜித் சார்’ என்று பதில் அளித்தார் கேத்தரின் தெரசா. மேலும் அவர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை பார்க்கவில்லை என்றும் விரைவில் பார்க்க போவதாகவும் கூறியிருக்கிறார்.

MUST READ