spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிருதை அவமதித்த பாப் பாடகர்... கிராமி கோப்பையில் மதுபானம்...

விருதை அவமதித்த பாப் பாடகர்… கிராமி கோப்பையில் மதுபானம்…

-

- Advertisement -
கிராமி விருது விழாவில் வழங்கப்பட்ட கோப்பையில், பாப் பாடகர் ஒருவர் மதுபானம் அருந்தி குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அனைத்து உலக திரைத்துறையிலும் சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் சிறந்த கலைஞர்களுக்கு பல தரப்பட்ட விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்திய அளவில் தேசிய விருது உயரிய விருதாக கருதப்படுகிறது. அதேபோல, ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட விருதுகளும் உலக அளவில் உயரிய விருதாக பேசப்படும். அதேபோல, இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் முக்கிய விருதுகள் ஒன்று கிராமி விருது. அந்த வகையில் 66-வது கிராமி விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அதில், சிறந்த இசைக்கலைஞர்கள், பாடகர்கள், சிறந்த பாடல், சிறந்த ஆல்பம், மற்றும் பாடல் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த ஆல்பத்திற்கான பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சக்தி இசைக்குழு தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. தி மொமண்ட் என்ற ஆல்பத்திற்காக விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்த இசைக்குழுவில், உஸ்தாத் ஜாகீர் உசேன், செல்வகணேஷ், கணேஷ் ராஜகோபாலன், ஷங்கர் மகாதேவன் ஆகியோர் இடம்பெற்றனர். அதேபோல, அமெரிக்காவின் பாப் பாடகர் ஜெ இசட்டுக்கு விருது வழங்கப்பட்டு உள்ளது.
we-r-hiring

விருதை பெற்ற மகிழ்ச்சியில் மேடையில் இருந்து கீழே வந்த ஜெ, கொண்டாடும் விதமாக சக நண்பர்களுடன் விருது கோப்பையில் மது ஊற்றி அருந்தினார். இச்சம்பவம் பெரும் இணையதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

MUST READ