spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதுருவ் விக்ரமை அடுத்து ஜீவாவுடன் இணையும் 'டாடா' பட இயக்குனர்!

துருவ் விக்ரமை அடுத்து ஜீவாவுடன் இணையும் ‘டாடா’ பட இயக்குனர்!

-

- Advertisement -

நடிகர் கவின் மற்றும் அபர்ணாதாஸ் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன படம் ‘டாடா‘. இப்படத்தை கணேஷ் கே பாபு என்பவர் இயக்கியிருந்தார். காதல் திருமணம் செய்து கொள்ளும் கல்லூரி மாணவர்கள் கணவன் மனைவியாக, பின் பெற்றோராக மாறும் படிநிலைகளில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மிக நேர்த்தியாக சொல்லியிருந்த படம் தான் டா டா. இளைஞர்களை கவரும் விதமான அனைத்து அம்சங்களையும் படம் கொண்டிருந்ததால் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கணேஷ் கே பாபுவின் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பும் சற்று அதிகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் தான் இவர் அடுத்ததாக துருவ் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ஆதித்ய வர்மா மற்றும் மகான் போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாமல் ஏமாற்றத்தை அளித்தது. தற்போது துருவ் விக்ரம் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு படமாக இது உருவாக உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கும் படத்தை நடித்து முடித்த பிறகு துருவ் விக்ரம் கணேஷ் கே பாபு கூட்டணியில் உருவாக உள்ள படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன.

we-r-hiring

இந்நிலையில்தான் கணேஷ் கே பாபுவின் மூன்றாவது படம் செய்திகள் வெளிவந்துள்ளன. இதன்படி நடிகர் ஜீவா உடன் கணேஷ் கே பாபு கைகோர்க்க உள்ளதாகவும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

MUST READ