நடிகர் கமல்ஹாசன் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 1987 இல் வெளியான நாயகன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 36 வருடங்கள் கழித்து மணிரத்தினம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளது. கமல்ஹாசனின் 234 வது படமான இந்த படத்திற்கு தக் லைஃப் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக் , ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார்.
இப்படம் மாஸான ஆக்ஷன் படமாக உருவாக உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதேசமயம் மணிரத்தினம், கமல்ஹாசன், ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் இப்படம் உருவாக உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜனவரி 18ஆம் தேதி சென்னையில் தொடங்க இருப்பதாக தகவல் கிடைத்தது. ஆனால் தற்போது ஒரு சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -