சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பிலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையிலும் இப்படம் உருவாகி வருகிறது. அதிக பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படம் 3D அனிமேஷனில் ஒரு வரலாற்று சரித்திர திரைப்படமாக தயாராகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானல் மற்றும் ராஜமுந்திரில் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதை தொடர்ந்து தற்போது இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து காட்டுப் பகுதியில் நடைபெற இருக்கின்றது. தற்போது, சென்னையை அடுத்துள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
கங்குவா படப்பிடிப்பின்போது ரோப் கேமரா அறுந்து விழுந்ததில், நடிகர் சூர்யா காயம் அடைந்தார். சென்னையை அடுத்துள்ள ஈவிபி பிலிம் சிட்டியில், நடந்த படப்பிடிப்பில், 10 அடிக்கு மேல் இருந்த ரோப் கேமரா திடீரென அறுந்து விழுந்ததில், சூர்யாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால், இன்று படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தான் நலமுடன் இருப்பதாக சூர்யா தெரிவித்திருந்தார். மேலும், விபத்தால் தடைபட்ட காட்சிகளின் படப்பிடிப்புகளும் நிறைவு பெற்றன. நடிகர் சூர்யா குணமடைந்து அந்த காட்சியை முடித்துவிட்டுச் சென்றதாக படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் தெரிவித்துள்ளார்.