Homeசெய்திகள்சினிமாஅரசுப் பள்ளியை தத்தெடுத்த ரிஷப் ஷெட்டி

அரசுப் பள்ளியை தத்தெடுத்த ரிஷப் ஷெட்டி

-

- Advertisement -
கடந்த ஆண்டு வெளியான காந்தாரா படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி. கிரிக் பார்ட்டி உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கி ரிஷப் ஷெட்டி காந்தாரா படத்தின் மூலம் நாயகனாகவும் உருவெடுத்தார். தான் நடித்த முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ரிஷப். கேஜிஎஃப் வெற்றி படங்களை தயாரித்த ஹோம்பாளே பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்தது.

முதலில் இத்திரைப்படம் கன்னடத்தில் வெளியானது. கன்னடத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு காந்தாரா திரைப்படம் வெளியானது. ரஜினி, கமல் என அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் படத்தை வெகுவாக பாராட்டினர். அனைத்து மொழிகளிலும் கோடிக்கணக்கில் வசூல் ஈட்டியது காந்தாரா திரைப்படம். இதன் முதல் பாகம் ‘காந்தாரா சாப்டர் 1’ என்ற பெயரில் இப்போது உருவாகிறது. இதன் பூஜை, உடுப்பி மாவட்டம் கும்பாசியில் உள்ள ஆனேகுட்டே விநாயகர் கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவு அடைந்தது.

இந்நிலையில், நடிகர் ரிஷப் ஷெட்டி கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள தனது சொந்த கிராமமான கீரடியில் உள்ள அரசுப் பள்ளியை தத்தெடுத்துள்ளார். தனது அறக்கட்டளை சார்பில் இந்தப் பள்ளிக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்துள்ளார். இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரிஷப் உறு அளித்துள்ளார். இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிராம மக்கள், ரிஷப் ஷெட்டிக்கு நன்றி தெரிவித்தனர்.

MUST READ