Homeசெய்திகள்சினிமாபுலிக்கு பிறகு மீண்டும் இணைந்த கூட்டணி... விஜய்யுடன் மீண்டும் இணையும் கிச்சா சுதீப்...

புலிக்கு பிறகு மீண்டும் இணைந்த கூட்டணி… விஜய்யுடன் மீண்டும் இணையும் கிச்சா சுதீப்…

-

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 68-வது திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க கிச்சா சுதீப் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். இது விஜய்க்கு 68-வது திரைப்படமாகும். ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி இப்படத்தை தயாரிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசை அமைக்கிறார். திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். சினேகா, லைலா, மைக் மோகன், விடிவி கணேஷ், ஜெயராம், பிரேம்ஜி, யோகி பாபு, வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜ்மல் அமீர், பிரபுதேவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று முடிந்தது. அண்மையில் படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பி, அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்கி இருக்கின்றனர். படத்தின் முதல் தோற்றத்தை புத்தாண்டு அன்று வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது. அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். புத்தாண்டை ஒட்டி படத்தின் முதல் தோற்றம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து டிவிட்டர் பக்கத்தில் விஜய்யுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சி, இனிமையான அனுபவம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த கணக்கு கிச்சா சுதீப்பின் அதிகாரப்பூர்வ கணக்கு இல்லாததால், ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்த புலி திரைப்படத்தில் வில்லனாக கிச்சா சுதீப் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ