Homeசெய்திகள்சினிமாபெர்லின் விழாவில் திரையிடப்பட்ட கொட்டுக்காளி... பாராட்டு மழையில் சூரி...

பெர்லின் விழாவில் திரையிடப்பட்ட கொட்டுக்காளி… பாராட்டு மழையில் சூரி…

-

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியிருக்கும் கொட்டுக்காளி திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. நகைச்சுவை நடிகராக கோலிவுட்டுக்கு அறிமுகமாகி, முகம் கூட தெரியாத அளவு ஒரு ஓரத்தில் நடித்துக் கொண்டிருந்த நாயகன், இன்று கோலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருகிறார். இறுதியாக சூரி நடிப்பில் வெளியான திரைப்படம் விடுதலை. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து சூரி அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது சூரி நடித்திருக்கும் திரைப்படம் கொட்டுக்காளி.

மலையாள நட்சத்திரம் அன்னா பென் நாயகியாக நடித்துள்ளார். ‘கூழாங்கள்’ படத்தின் மூலம் பல்வேறு நாடுகளுக்கு சென்று சர்வதேச விருதுகளை வாங்கிய பி.எஸ் வினோத் ராஜ் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தன. இதனிடையே, , 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் பிரத்யேக திரையிடலுக்கு கொட்டுக்காளி திரைப்படம் முதல் தமிழ் படமாக தேர்வானது என முன்னரே அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனும் அறிக்கை வெளியிட்டிருந்தார்

இந்நிலையில், பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில், கொட்டுக்காளி திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இதற்காக படக்குழுவினர் அனைவரும் பெர்லின் சென்றுள்ளனர். அங்கு படக்குழுவினர் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

MUST READ