spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபுதிய படத்திற்காக இணையும் மலையாள சூப்பர் ஸ்டார்கள்

புதிய படத்திற்காக இணையும் மலையாள சூப்பர் ஸ்டார்கள்

-

- Advertisement -
மலையாள திரையுலகின் முன்னணி ஸ்டாராக வலம் வருபவர் பிருத்விராஜ் சுகுமாறன். இவர் மலையாள நடிகராக இருந்தாலும், தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், சத்தம்போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை, அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும் உள்பட பல திரைப்படங்கள் நடித்திருக்கிறார். இது தவிர இந்தியிலும் அவர் 3 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இறுதியாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிப்பு மட்டுமன்றி இயக்கத்திலும் பிருத்விராஜ் ஆர்வம் காட்டி வருகிறார். லூசிபர் என்ற படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகம் ஆனார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமன்றி தற்போது இந்தி திரையுலகிலும் ஆர்வம் காட்டி வருகிறார். கஜோலுடன் இணைந்து புதிய படம் நடிக்க உள்ளார். இப்படத்தை கரண் ஜோகர் தயாரிக்கிறார்

இந்நிலையில், நடிகர் பிருத்விராஜும், மலையாள சூப்பர் ஸ்டார் மம்முக்கா என்று அழைக்கப்படும் மம்மூட்டியும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளனர். அறிமுக இயக்குநர் ஒருவர் இத்திரைப்படத்தை இயக்குகிறார். படத்தில் ஒருவர் வில்லனாகவும், மற்றொரு ஹீரோ வேடத்திலும் நடிக்கின்றனர். படத்தின் மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ