‘பொன்னியின் செல்வன்’ நாவலை ஏன் வெப் சீரிஸாக எடுக்கவில்லை என்பதற்கு மணிரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக உருவாகி உள்ளது. இரண்டு பாகங்களுக்கும் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
படத்தின் முதல் பாகம் வெளியாக ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதற்கிடையில் இவ்ளோ பெரிய கதை இருக்கிற நாவலை வெப் சீரிஸாக எடுத்தால் இன்னும் நிறைய நேரம் காட்சிப் படுத்தியிருக்க முடியும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன்‘ நாவலை ஏன் வெப் சீரிஸாக எடுக்கவில்லை என்பதற்கு தற்போது மணிரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.
“வெப் சீரிஸ் எடுக்கும் அளவு நீண்ட நாட்களுக்கு எந்த நடிகரும் கிடைக்க மாட்டார்கள். தனது புரிதலின் மூலம் கதையை விளக்குவதும், முன்வைப்பதும் தான் படம்” என்று தெரிவித்துள்ளார்.
5 பாகங்கள் கொண்ட நாவலை இரண்டு பாகங்களாக சுருக்கி அந்தக் கதைக்கு மணிரத்னம் நியாயம் சேர்ந்தாரா என்பதை ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும்.