Homeசெய்திகள்சினிமாஇளையராஜாவின் நோட்டீஸூக்கு மஞ்சுமல் பாய்ஸ் தயாரிப்பாளர் விளக்கம்

இளையராஜாவின் நோட்டீஸூக்கு மஞ்சுமல் பாய்ஸ் தயாரிப்பாளர் விளக்கம்

-

கடந்த சில மாதங்களாக மலையாள மொழியில் வெளியாகும் அனைத்து படங்களுமே மோலிவுட்டை தாண்டி பல மொழிகளில் படம் ஹிட் அடிக்கின்றன. அதில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இயக்குநர் சிதம்பரம் இயக்கிய இத்திரைப்படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர், உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் சுமார் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டியுள்ளது. அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் வலியத்தரா என்பவர், மஞ்சுமல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் மீது எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். லாபத்தில் 40 சதவிகிதம் தருவதாக கூறி மோசடி செய்துவிட்டனர். இதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், படத்திற்கு மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. அதன்படி, படத்தில் இடம்பெற்ற கண்மணி பாடலை தனது அனுமதியின்றி பயன்படுத்தியதாக , படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார். பாடலை நீக்க வேண்டும் அல்லது இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் கோரியிருந்தார். இதற்கு விளக்கம் அளித்த படத்தின் தயாரிப்பாளர் கண்மணி பாடலை உரிமம் பெற்ற பின்பே பயன்படுத்தினோம், இதுவரை இளையராஜாவின் எந்த நோட்டீஸூம் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

MUST READ