spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகர் சங்கம் செய்தது மிகப்பெரிய தவறு - மன்சூர் அலிகான் காட்டம்

நடிகர் சங்கம் செய்தது மிகப்பெரிய தவறு – மன்சூர் அலிகான் காட்டம்

-

- Advertisement -

நடிகர் சங்கம் செய்தது மிகப்பெரிய தவறு என்றும், நான்கு மணி நேரத்திற்குள் அவர்கள் கொடுத்த அறிக்கையை திரும்பப் பெற்று மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என்றும் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகான், சமீபத்தில் திரிஷா குறித்தும் மற்ற நடிகைகள் குறித்தும் கேவலமாக பேசியிருந்தார். இதற்கு த்ரிஷா, ரோஜா, குஷ்பூ, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் அலட்சியமாக பதில் அளித்திருந்தார்.

we-r-hiring
எனவே தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரான குஷ்பூ, மன்சூர் அலிகான் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்ததன்படி தேசிய மகளிர் ஆணையம் சட்டப்பிரிவு 509 பி, மேலும் இது தொடர்புடைய மற்ற பிரிவுகளின் கீழ் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய தமிழக அரசு டி.ஜி.பிக்கு உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கமும் மன்சூர் அலிகானின் அநாகரிகமான பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், “நடிகர் மன்சூர் அலிகானின் சமீபத்திய பேச்சுக்கு சங்கத்தின் சார்பாக கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் சங்கம் எடுக்கும் முடிவுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக்கு குறிப்பிட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது

களத்தில் இறங்கிய தேசிய மகளிர் ஆணையம்.... மன்சூர் அலிகான் மீது பாயும் வழக்கு!!

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெவிதித் நடிகர் மன்சூர் அலிகான், நான்கு மணி நேரத்திற்குள் அவர்கள் கொடுத்த அறிக்கையை திரும்பப் பெற்று மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நடிகர் சங்கம் முறையாக என்னிடம் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை, நோட்டீஸ் அனுப்பவில்லை. இது ஒரு நடைமுறையா என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் பத்திகையாளர்களை கூட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் காட்டமாக பேசியுள்ளார்.

MUST READ