Homeசெய்திகள்சினிமாமோகன்லால் நடிப்பில் உருவாகும் 'நேரு'.... ஷூட்டிங் எப்போது?

மோகன்லால் நடிப்பில் உருவாகும் ‘நேரு’…. ஷூட்டிங் எப்போது?

-

- Advertisement -

மோகன்லால் நடிக்கும் நேரு படத்தில் ஷூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

மோகன்லால் தற்போது நந்தா கிஷோர் இயக்கத்தில் வ்ருஷபா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மோகன்லாலின் த்ரிஷயம் 1, த்ரிஷயம் 2, 12th Man உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். நேரு என்ற தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் ப்ரடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

நேரு – SEEKING JUSTICE என்ற டேக் லைனுடன் இந்த டைட்டில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதன் மூலம் இந்த படம் நீதியை தேடுவது சம்பந்தமான கதைக்களத்தில் உருவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த படத்திற்கு விஷ்ணு ஷியாம் இசையமைக்கவுள்ளார். சதீஷ் குருப் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது. அதன்படி இதன் படப்பிடிப்பு நாளை திருவனந்தபுரம் பகுதியில் தொடங்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ