சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் மாவீரன் திரைப்படம் வெளியானது. இந்த படம் பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் SK21 படத்தில் நடிக்க இருக்கிறார். இதைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருதாஸூடன் 23-வது படத்தில் நடிக்கிறார். விரைவில் துவங்க இருக்கும் இந்தப் படத்தின் கதாநாயகி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
படத்திற்காக இரு கதாநாயகிகள் பரிசீலனையில் இருக்கின்றனராம். நடிகை பூஜா ஹெக்டே மற்றும் சீதாராமம் படத்தின் நாயகி மிருனாள் தாகூர் ஆகிய இருவரும் இந்தப் படத்தில் யாரேனும் ஒருவர் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
இந்நிலையில், இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் சேர்ந்து முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் அவர் நடித்திருப்பார்.