“விஜயகாந்த் மகன் என்ற பெருமை மட்டும் போதும்” என்று கூறிய விஜயகாந்த் மகன்.R.K.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான கேப்டன் பிரபாகரன் படம் விஜயகாந்திற்கு பெரும் வெற்றியை அள்ளித் தந்தது. இது விஜயகாந்தின் 100வது திரைப்படம். இதன் மூலமாகத் தான் விஜயகாந்த் கேப்டன் என்ற அடைமொழியுடன் ரசிகா்களால் அன்போடு அழைக்கப்பட்டாா். விஜயகாந்திற்கு இரண்டு மகன்கள் உள்ளனா். மூத்த மகனான சண்முக பாண்டியன் அரசியலில் தன்னுடைய பாதை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில், இளைய மகனான விஜய பிரபாகரன் சினிமாவிலும் களமிறங்கியுள்ளாா்.
இந்நிலையில் கேப்டன் பிரபாகரன் படம் வருகின்ற 22-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இப்பட விழாவில் விஜய பிரபாகரன் ”எம்.பி பதவி எல்லாம் எனக்கு முக்கியம் இல்லை. கேப்டன் மகன் விஜய பிரபாகரன் என்ற பெயா் தான் எனக்கு முக்கியம் எனக்கு வேற பெருமை எதுவும் வேண்டாம், கடைசி வரை விஜயகாந்த் மகன் என்ற பெருமை மட்டும் போதும்” என்று கண்ணீா் மல்க கூறினாா். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.