Homeசெய்திகள்சினிமாவௌ்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நயன்தாரா உதவி .... பெண்களுக்கு இலவச நாப்கின்கள்...

வௌ்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நயன்தாரா உதவி …. பெண்களுக்கு இலவச நாப்கின்கள்…

-

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பெண்களுக்கு நயன்தாராவின் பெமி9 நிறுவனம் சார்பில் இலவசமாக நாப்கின்கள் வழங்கப்பட்டன.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் தீவிர புயலால், சென்னை முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. 47 ஆண்டுகளில் இல்லாத அளவு, 2015-ம் ஆண்டை காட்டிலும் கனமழை வெளுத்து வாங்கியது. மழை நின்று மூன்று நாட்கள் ஆன போதிலும், சென்னை நகரம் இதுவரை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. பல இடங்களில் தேங்கிய தண்ணீர் வடியாமல் அப்படியே உள்ளது. இதனால், மக்கள் மற்றும் மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கும், அலுவலகங்களுக்கும் செல்ல முடியாத சூழல் உருவாகி வருகிறது. அதுமட்டுமன்றி, பல இடங்களில் இதுவரை தொலைதொடர்பு சேவைகள் முறையாகவில்லை. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 15 இடங்களில் அதி கனமழை பதிவானது.

வேளச்சேரி சாலையில் சுமார் 40 அடிக்கு மேல் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதில், பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்ததில், பணியாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதேபோல, அடுக்குமாடி குடியிருப்பும் தரையில் சரிந்தது. கனமழை காரணமாக சென்னையில் அனைத்து பகுதிகளிலும் கடும் சேதம் ஏற்பட்டது. மழை நின்ற போதிலும், கட்டடங்களை மழைநீர் சூழ்ந்ததால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பலர் அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரும் ஒன்று திரண்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். அரசுடன் சேர்ந்து சினிமா நட்சத்திரங்களும் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். சூர்யா, கார்த்தி, ஹரிஸ் கல்யாண் ஆகியோர் அரசுக்கு வெள்ள நிவாரண பணிகளுக்காக நிதியுதவி வழங்கி இருக்கின்றனர். இந்நிலையில், வேளச்சேரி பகுதியில் நயன்தாரா சார்பில் நிவாரண உதவிகள் செய்யப்பட்டன. ஃபெமி9 பிராண்ட் நாப்கின்கள் பெண்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. இதையடுத்து, பெண்கள் பலரும் அவருக்கு நன்றி தெரிவித்தனர். இருப்பினும், நிவாரணப் பொருட்கள் வழங்கும் வண்டியில் விளம்பர பேனர் தேவையா என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

MUST READ