spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநெல்சனின் அடுத்த பிளான்..... 'ஜெயிலர் 2' குறித்து வெளியான புதிய தகவல்!

நெல்சனின் அடுத்த பிளான்….. ‘ஜெயிலர் 2’ குறித்து வெளியான புதிய தகவல்!

-

- Advertisement -

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். இதில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன் , யோகி பாபு உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஏ படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் தற்போது வரை 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

we-r-hiring

சிலை கடத்தல் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான படம் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பிறகு நெல்சனுக்கு ஜெய் லிட்டர் திரைப்படம் ஒரு கம்பேக்காக அமைந்தது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நெல்சன் திலீப் குமார், ” ஜெயிலர் இரண்டாம் பாகம் உருவாக்க திட்டம் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் கோலமாவு கோகிலா டாக்டர் உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகத்தையும் இயக்க இருக்கிறேன். மேலும் ரஜினி மற்றும் விஜய் இருவரும் மாஸான ஸ்டார்கள். இருவரின் நடிப்பிலும் ஒரு படம் இயக்க திட்டமிட்டுள்ளேன். இது கடினமான வேலை தான். ஆனாலும் சரியான நேரம் அமைந்தால் இருவரையும் வைத்து படம் இயக்குவேன் என்ற நம்பிக்கை உள்ளது” என்று பேசியுள்ளார்.

சமீப காலமாக ரஜினி ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. தற்போது நெல்சனின் இந்த பதிலால் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ