Homeசெய்திகள்சினிமாபுஷ்பா பட நடிகரை ஜாமீனில் எடுத்த படக்குழு... படப்பிடிப்புக்காக ரிஸ்க்....

புஷ்பா பட நடிகரை ஜாமீனில் எடுத்த படக்குழு… படப்பிடிப்புக்காக ரிஸ்க்….

-

பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைதாகி சிறைக்கு சென்ற புஷ்பா பட நடிகர் ஜெகதீஸ் பிரதாப் பண்டாரியை படக்குழுவினர் ஜாமீனில் எடுத்துள்ளனர்.

கடந்த 2021-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா கூட்டணியில் வெளியான இந்த படம் தெலுங்கு , கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளிலும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ல் வெளியாக இருக்கிறது.

‘புஷ்பா தி ரூல்‘ படத்திலும் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்த பகத் பாஸில் வில்லனாக நடிக்கிறார்.மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். கடந்த மே மாதம் ஃபகத் ஃபாசில் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. ஐதராபாத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் புஷ்பா இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதனிடையே, புஷ்பா பட நடிகர் ஜெகதீஷ் பிரதாப், பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். ஜெகதீஷ் சிறைக்கு சென்றதால் அவரை போலவே முகபாவனையில் இருக்கும் ஒருவரை டூப் போட்டு மீதம் இருக்கும் காட்சியை படமாக்க படக்குழு திட்டமிட்டது. ஆனால், அவை ஒட்டமொத்த படத்தையும் பாதிக்கும் என்பதால், புஷ்பா படக்குழு 20 லட்சம் ரூபாய் செலவு செய்து ஜெகதீஷை ஜாமீனில் எடுத்துள்ளது.

MUST READ