நெல்சன் இயக்கத்தில் ரஜினி – கமல் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நடிப்பு ஜாம்பவான்களாக வலம் வருகின்றனர். இருவருமே இந்த வயதிலும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். தற்போது ரஜினி நடிப்பில் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. அடுத்தது இவர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் கமல்ஹாசன், கடைசியாக ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கிடையில் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கப்போவதாக சமீபகாலமாக பல தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளன.
ஏற்கனவே இவர்கள் இருவரும் பல படங்களில் நடித்திருக்கும் நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்க இருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது. ரஜினி, கமல் இருவருமே தாங்கள் இணைந்து நடிப்பதை தனித்தனியே உறுதி செய்துள்ளனர். ஆனால் இயக்குனர் மட்டும் உறுதி செய்யப்படவில்லை. அதன்படி ஆரம்பத்தில் இவர்களின் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாக சொல்லப்பட்டது. பின்னர் பிரதீப் ரங்கநாதன் இயக்க வாய்ப்புள்ளதாகவும் பேச்சு அடிபட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க இருக்கிறாராம்.
ஜெயிலர் 2 படத்தை முடித்த பின்னர் ரஜினி- கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் முன் தயாரிப்பு பணிகளை பணிகளை தொடங்க இருக்கிறாராம் நெல்சன். இந்த தகவல் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தி வருகிறது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.


