சப்தம் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஆதி, நந்தா, சிந்து மேனன், சரண்யா மோகன் ஆகியோரின் நடிப்பில் ஈரம் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தினை அறிவழகன் இயக்கியிருந்தார். சூப்பர் நேச்சுரல் திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து மீண்டும் ஆதி, அறிவழகன் கூட்டணி புதிய படம் ஒன்றில் இணைந்துள்ளது. அதன்படி இந்த படத்திற்கு சப்தம் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் ஆதியுடன் இணைந்து லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, அபிநயா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை 7 ஜி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க தமன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஈரம் படத்தை போல் இந்த படமும் ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகளும் டப்பிங் பணிகளும் நிறைவடைந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் டீசரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் இன்று (டிசம்பர் 25) மாலை 6:30 மணி அளவில் இந்த படத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. எனவே இந்த அறிவிப்பு ரிலீஸ் குறித்து அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.