நடிகை சாய் பல்லவி தற்போது இந்திய திரை உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.
ஆரம்பத்தில் நடிகை சாய் பல்லவி ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதன் பின் கடந்த 2015ல் மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்தார். மலையாள சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே பல்வேறு ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தார். அதன் பிறகு தமிழில் மாரி 2, NGK , கார்கி போன்ற படங்களில் நடித்து அசத்தினார்.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் SK21 படத்தை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். அதே சமயம் தெலுங்கில் நாக சைதன்யாவுடன் இணைந்து தண்டெல் படத்திலும் நடித்து வருகிறார்.
இவ்வாறு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பலமொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி தற்போது கன்னட சினிமாவிலும் அறிமுகமாக இருக்கிறார். அந்த வகையில் கேஜிஎப் படங்களின் மூலம் ஸ்டார் அந்தஸ்தை பெற்ற நடிகர் யாஷுக்கு ஜோடியாக யாஷ்19 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான நளதமயந்தி திரைப்படத்தில் நடித்திருந்தால் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இந்த படத்தின் டைட்டில் குறித்து அறிவிப்பு இன்று காலை 9. 55 மணி அளவில் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த படம் பான் இந்தியா அளவில் வெளியாக இருக்கிறது
என்பது குறிப்பிடத்தக்கது.