spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜயகாந்தின் உடல் நிலையை நினைத்து உயிரிழந்த வசனகர்த்தா..... சோகத்தில் திரைத்துறை!

விஜயகாந்தின் உடல் நிலையை நினைத்து உயிரிழந்த வசனகர்த்தா….. சோகத்தில் திரைத்துறை!

-

- Advertisement -

விஜயகாந்தின் உடல் நிலையை நினைத்து உயிரிழந்த வசனகர்த்தா..... சோகத்தில் திரைத்துறை!
விஜயகாந்தின் உடல் நிலையை நினைத்து வசனகர்த்தா உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த நவம்பர் 18ஆம் தேதி நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் கழித்து விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை எனவும் அவருக்கு 15 நாட்கள் சிகிச்சை தேவைப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.  கடந்த சில நாட்களாக மார்பு சளி போன்ற பிரச்சனைகள் அவதிப்பட்டு வந்த கேப்டன் விஜயகாந்த் குறித்து இன்னும் இரண்டு நாட்களில் நல்ல செய்தி வரும் என்று என்று விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கூறியதன் படி, கேப்டன்  விஜயகாந்த் நேற்று உடல் நலம் தேறி வீடு திரும்பினார்.விஜயகாந்தின் உடல் நிலையை நினைத்து உயிரிழந்த வசனகர்த்தா..... சோகத்தில் திரைத்துறை!

we-r-hiring

ஆனால் இதற்கிடையில் விஜயகாந்த்திற்கு சேர்க்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் பல செய்திகள் பரவி வந்த நிலையில், அதனை கேட்டு சினிமா வசனகர்த்தா வேலுமணி என்பவர் நீண்ட நாட்களாக சோகத்தில் இருந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று மாரடைப்பு காரணமாக வசனகர்த்தா வேலுமணி திடீரென உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை திரைத்துறையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விஜயகாந்த் நடித்துள்ள தேவன், விருதகிரி, எங்கள் ஆசான் போன்ற படங்களில் வேலுமணி தான் வசனம் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ