சல்மான் கானை கொலை செய்ய திட்டம்… தலைமறைவாக இருந்த நபர் கைது…
- Advertisement -
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான்கான். அவர் இந்தியில் பல படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது பிரபல தமிழ் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஸ்கந்தர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், அண்மையில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்தில் ராஷ்மிகா மந்தனா, கரீனா கபூக் ஆகியோர் நடிக்கின்றனர்.
அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனிடையே, கடந்த ஏப்ரல் மாதம் மும்பை பாந்ரா பகுதியில் உள்ள சல்மான் கான் வீட்டின் முன்பு, சுவரில் தோட்டா பாய்ந்து துளை விழுந்தது. வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய சிசிடிவி காட்சியும் வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்திய போலீசார், நடிகர்வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விக்கி குப்தா அனுஜ், சாகர் பால் ஆகிய இருவரை கைது செய்தனர்.
இந்நிலையில், நடிகர் சல்மான் கானைகொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்பட்ட லத்தூர்லால் குஜ்ஜார் என்பவரை போலீசார் கைது செய்தனர். சல்மானை கொலை செய்ய திட்டம் தீட்டியிருந்தது குறித்து குஜ்ஜார், யூடியூப் பக்கத்தில் வௌியிடப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட, போலீசார், ராஜஸ்தானில் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்தனர்.