spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசினிமாவில் இருந்து ஓய்வு எடுத்தது சிறந்த முடிவு... சமந்தா திட்டவட்டம்...

சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்தது சிறந்த முடிவு… சமந்தா திட்டவட்டம்…

-

- Advertisement -
சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்தது சிறந்த முடிவு என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

சென்னையில் பல்லாவரத்தில் ஏதோ ஒரு பகுதியில் பிறந்து, இன்று மொத்த இந்தியாவுக்கும் கனவுக்கன்னியாக இருப்பவர் நடிகை சமந்தா. விஜய், சூர்யா, மகேஷ் பாபு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜூனியர் என்டிஆர் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். அவர் அறிமுகமாகி நடித்தது தமிழாக இருந்தாலும், இன்று அவர்கோலிவுட் நடிகையாக மட்டுமன்றி இந்திய அளவில் ஹிட் நடிகையாக உருவெடுத்துள்ளார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான யசோதா, சாகுந்தலம் உள்ளிட்ட படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்றன.

we-r-hiring
இதைத் தொடர்ந்து சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான குஷி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு வசூலையும் குவித்தது. இதைத் தொடர்ந்து சிட்டாடெல் இந்தியா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் வருண் தவான் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிப்பில் பிசியாக இருந்தபோது, அதிலிருந்து ஓய்வு எடுத்தது சரியான முடிவு. இது மிகவும் கடினமாக இருந்தாலும், அதை சரியான முடிவாகத்தான் பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 13 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வரும் நான் ஓய்வு எடுப்பதில் மகிழ்ச்சி எனவும் சமந்தா தெரிவித்துள்ளார்.

MUST READ