Homeசெய்திகள்சினிமாசுந்தர்.சி சொன்ன அந்த வார்த்தை பலிச்சிருச்சு.... சந்தானம் பேச்சு!

சுந்தர்.சி சொன்ன அந்த வார்த்தை பலிச்சிருச்சு…. சந்தானம் பேச்சு!

-

- Advertisement -

நடிகர் சந்தானம் சுந்தர்.சி குறித்து பேசி உள்ளார்.சுந்தர்.சி சொன்ன அந்த வார்த்தை பலிச்சிருச்சு.... சந்தானம் பேச்சு!நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவருடைய டைமிங் காமெடிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சந்தானம் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் தான் கடந்த ஜனவரி மாதம் இவர் காமெடியனாக நடித்திருந்த மதகஜராஜா திரைப்படம் 12 வருடங்கள் கழித்து திரைக்கு வந்தது. இந்த படத்தில் சந்தானத்தின் காமெடி வழக்கம்போல் ஒர்க் அவுட் ஆகி இருந்தது. ரசிகர்களும் அதனை கொண்டாடினர். அதைத்தொடர்ந்து சந்தானம், சிம்பு நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் (STR 49) மீண்டும் காமெடியனாக நடிக்கப் போகிறார் என சொல்லப்படுகிறது. சுந்தர்.சி சொன்ன அந்த வார்த்தை பலிச்சிருச்சு.... சந்தானம் பேச்சு!அதாவது சந்தானம், STR 49 படத்தில் தான் சிம்புவுடன் இணைந்து நடிப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அவருடைய கதாபாத்திரம் காமெடியான கதாபாத்திரமா? அல்லது இப்படம் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டா? என்பது குறித்த உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையில் சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய சந்தானம், “மதகஜராஜா திரைப்படம் 12 வருடங்களுக்கு பிறகு வரப்போகுதுன்னு தெரிஞ்சதும் எனக்கு பயமா இருந்துச்சு. சுந்தர்.சி சொன்ன அந்த வார்த்தை பலிச்சிருச்சு.... சந்தானம் பேச்சு!அப்போ பண்ண காமெடி இப்பயும் ஒர்க் அவுட் ஆகுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அது ஒர்க் அவுட் ஆனது. அந்த படத்தில் நடிக்கும் போது சுந்தர்.சி சார் என்னிடம், ‘சந்தானம் உங்கள் நேரம் ரொம்ப நல்லா இருக்கு. நீங்க தொட்டதெல்லாம் துலங்குது. அதனால் மதகஜராஜா படத்திலும் உங்களுடைய போர்ஷன் ஹிட் அடிக்கும்’ என்றார். அவர் சொன்ன அந்த வார்த்தை பலிச்சிருச்சு” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ