Homeசெய்திகள்சினிமாபிரபாஸூடம் மீண்டும் நடிக்க நிபந்தனை போட்ட பிரபல பாலிவுட் நடிகை

பிரபாஸூடம் மீண்டும் நடிக்க நிபந்தனை போட்ட பிரபல பாலிவுட் நடிகை

-

- Advertisement -
அனைத்திந்திய மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு உச்ச நடிகராக உருவெடுத்தார். பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் சாஹோ. இத்திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்திருந்தார்.

மேலும் இப்படத்தில் அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராஃப், மந்திரா பேடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சுஜித் இத்திரைப்படத்தை இயக்கி இருந்தார். ஆக்‌ஷன் அதிரடி நிறைந்த டிராமாவாக இத்திரைப்படம் உருவானது. இப்படத்தில் இணைந்து நடித்த பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஜோடி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ரசிகர்களுடன் நடிகை ஷ்ரத்தா கபூர் சமூக வலைதளத்தில் கலந்துரையாடினார். உரையாடலின் போது பிரபாஸூடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஷ்ரத்தா, பிரபாஸ் வீட்டிலிருந்து உணவு வந்தால் நிச்சயம் அவருடன் மீண்டும் இணைந்து நடிப்பேன் என்று தெரிவித்தார்

MUST READ