spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதிருநங்கையாக நடிக்கும் சிம்பு...... ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

திருநங்கையாக நடிக்கும் சிம்பு…… ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

-

- Advertisement -

திருநங்கையாக நடிக்கும் சிம்பு...... ஆச்சரியத்தில் ரசிகர்கள்!நடிகர் சிம்பு தற்போது தனது 48வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் பீரியாடிக் படமாக உருவாக உள்ளது. மேலும் இப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியாகி சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்த போஸ்டரில் நடிகர் சிம்பு இரட்டை வேடங்களில் காண்பிக்கப்பட்டார். திருநங்கையாக நடிக்கும் சிம்பு...... ஆச்சரியத்தில் ரசிகர்கள்!அதன்படி நடிகர் சிம்பு STR 48 படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்கிறார் என்று சில தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இதில் சிம்பு திருநங்கையாக நடிக்க உள்ளாராம். அதாவது சிம்புவின் வில்லன் கதாபாத்திரம் தான் திருநங்கை கதாபாத்திரமாம். இதற்காக நடிகர் சிம்பு சில பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.திருநங்கையாக நடிக்கும் சிம்பு...... ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

ஏற்கனவே STR 48 படத்திற்காக கடினமாக ஒர்க் அவுட் செய்து தனது லுக்கை மாற்றி இருக்கிறார். இந்நிலையில் சிம்பு திருநங்கையாக நடிக்க இருக்கும் தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக மிர்ணாள் தாகூர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ