spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசலார் 2 மிகவும் மிரட்டும்... ஷ்ரேயா ரெட்டி தகவல்...

சலார் 2 மிகவும் மிரட்டும்… ஷ்ரேயா ரெட்டி தகவல்…

-

- Advertisement -
சலார் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் மிரட்டலாக இருக்கும் என படத்தில் நடித்திருந்த ஷ்ரேயா ரெட்டி தெரிவித்துள்ளார்.

கன்னட திரை உலகின் ஜாம்பவனாக உயர்ந்துள்ள இயக்குநர் பிரசாந்த் நீல். அவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் சலார். பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த வாரம் பான் இந்தியா படமாக வெளிவந்தது. முதல் பாகமாக சலார் 1 தி சீஸ்பயர் என்ற பெயரில் அப்படம் வெளி வந்தது. முதல் பாகத்தில் கான்சார் நாட்டின் மன்னர் ராஜமன்னார் மகளாக ‘ராதா ரமா’ என்ற முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ளார். இவர் விஷால் நடித்த திமிரு படத்தின் மூலம் பிரபலமானவர்.

we-r-hiring
தமிழில் ‘திமிரு’ படத்திற்குப் பிறகு “வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம், சில நேரங்களில் சில மனிதர்கள், அண்டாவ காணஓம், ஆகிய படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தெலுங்கில், அப்புடப்புடு, அம்மா செப்பிந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அண்மையில் இவரது நடிப்பில் சுழல் என்ற தொடர் வெளியானது. புஷ்கர் காயத்ரி இந்த தொடரை இயக்கியிருந்தனர். இதில், போலீஸ் அதிகாரியாக ஸ்ரேயா ரெட்டி நடித்திருப்பார். இதையடுத்து தெலுங்கில் சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு சலார் படத்தில் ஷ்ரேயா ரெட்டி நடித்து இருக்கிறார்.

தற்போது இப்படத்திற்காக ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், சலார் 2′ படத்தில் எனது கதாபாத்திரம் நீண்ட நேரம் இடம் பெறும். முதல் பாகத்தில் கதாபாத்திர அறிமுகம் மட்டுமே இருந்தது. இரண்டாம் பாகத்தில் தான் பல விஷயங்கள் நடக்கும். அது இன்னும் மிரட்டலாக இருக்கும் என தெரிவித்தார்.

MUST READ