spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபுஷ்பா 2-க்கு முன்பே 3-ம் பாகத்தின் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு...

புஷ்பா 2-க்கு முன்பே 3-ம் பாகத்தின் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு…

-

- Advertisement -
புஷ்பா இரண்டாம் பாகத்தின் வெளியீட்டுக்கு முன்பே, படக்குழு 3-ம் பாகத்தின் காட்சிகளின் படப்பிடிப்பும் நடைபெற்றது.

அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இத்திரைப்படம் சுமார் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் மட்டுமன்றி இந்தியிலும் புஷ்பா திரைப்படம் சக்கைப்போடு போட்டது. படத்தில் சுனில், ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். புஷ்பா படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜூன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அண்மையில் பெற்றார். படத்தின் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கும் தேசிய விருது வழங்கப்பட்டது.

we-r-hiring
புஷ்பா முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு அண்மையில் வெளியாகி படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியான ‘புஷ்பா தி ரூல்‘ படத்திலும் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்த பகத் பாஸில் வில்லனாக நடிக்கிறார்.மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். கடந்த மே மாதம் ஃபகத் ஃபாசில் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

புஷ்பா 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருதிறது. இதில் ராஷ்மிகா மந்தனாவும் கலந்து கொண்டார். இந்நிலையில், 2-ம் பாகத்தின் வெளியீட்டுக்கு முன்பாகவே, 3-ம் பாகத்தின் வெளியீடு குறித்தும், படப்பிடிப்பு குறித்தும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இரண்டாம் பாக படப்பிடிப்பின்போதே, 3-ம் பாகத்திற்கு தேவையான காட்சிகளும் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ