spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசுந்தர் .சி இயக்கத்தில் நடிக்க ஓகே சொன்ன கார்த்தி.... படப்பிடிப்பு எப்போது?

சுந்தர் .சி இயக்கத்தில் நடிக்க ஓகே சொன்ன கார்த்தி…. படப்பிடிப்பு எப்போது?

-

- Advertisement -

சுந்தர் .சி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வெற்றி படங்களில் நடித்து தனக்கென தனி ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே கைவசம் வைத்திருக்கிறார்.சுந்தர் .சி இயக்கத்தில் நடிக்க ஓகே சொன்ன கார்த்தி.... படப்பிடிப்பு எப்போது? அதே சமயம் இவர் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஏற்கனவே இவர் வா வாத்தியார் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் சர்தார் 2, கைதி 2, கார்த்தி 29 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இது தவிர மாரி செல்வராஜ், ஹெச். வினோத் ஆகிய முக்கிய இயக்குனர்களுடன் கூட்டணி அமைக்க இருக்கிறார். இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் கார்த்தி, சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கப் போவதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் சுந்தர். சி கார்த்தியிடம் சொன்ன கதை கார்த்திக்கு பிடித்த போனதால், இவர்களது கூட்டணியிலான புதிய படம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. சுந்தர் .சி இயக்கத்தில் நடிக்க ஓகே சொன்ன கார்த்தி.... படப்பிடிப்பு எப்போது?அதன்படி நடிகர் கார்த்தியும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி என மூன்று மாதங்கள் சுந்தர். சி-க்கு கால்ஷீட் கொடுத்திருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கப் போவதாகவும் இதற்காக சுந்தர். சியிடம் அட்வான்ஸ் கொடுத்து விட்டதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகையினால் கார்த்தி மற்றும் சுந்தர். சி ஆகிய இருவரும் தங்களின் கமிட்மெண்டுகளை முடித்துவிட்டு புதிய படத்தில் இணைவார்கள் என்று நம்பப்படுகிறது.

MUST READ