சுந்தர்.சி – விஷால் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர்.சி. இவருடைய இயக்கத்திலும், நடிப்பிலும் கடைசியாக ‘கேங்கர்ஸ்’ திரைப்படம் வெளியானது. காமெடி கலந்த கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இது தவிர சுந்தர். சி, நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் இவர், விஷால் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சமீபகாலமாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது ஏற்கனவே சுந்தர்.சி விஷால் கூட்டணியில் ஆம்பள, ஆக்ஷன், மதகஜராஜா ஆகிய படங்கள் வெளியாகின. அதில் ‘மதகஜராஜா’ திரைப்படம் பல வருடங்கள் கழித்து திரைக்கு கொண்டுவரப்பட்டாலும் ரசிகர்களால் கொண்டாடி தீர்க்கப்பட்டது. எனவே இந்த கூட்டணி மீண்டும் இணைய இருக்கும் தகவல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் நடிகை கயடு லோஹர் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என தகவல் கசிந்திருந்தது.
மேலும் இந்த படம் இன்று (அக்டோபர் 14) தொடங்க இருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படத்தின் ப்ரோமோ தொடர்பான படப்பிடிப்பு தான் இன்று தொடங்கி இருப்பதாகவும், இந்த படப்பிடிப்பு மூன்று நாட்கள் நடைபெற இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என நம்பப்படுகிறது. மேலும் இனிவரும் நாட்களில் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ப்ரோமோவுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.